Freelancer / 2022 ஜூன் 16 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ். பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில், மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம், வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026