Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Mayu / 2024 ஜூலை 28 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கால கட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 64பேரின் வழக்குகள் செவ்வாய்க்கிழமை (30) திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
கடந்த ஜூலை 1ஆம் திகதி 25 கடற்தொழிலாளர்களும் , ஜூலை 16ஆம் திகதி 04 கடற்தொழிலாளர்களும் , ஜூலை 11ஆம் திகதி 13 கடற்தொழிலாளர்களும், ஜூலை 22ஆம் திகதி 22 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதாகியுள்ள 64 கடற்தொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
25 minute ago
33 minute ago