2025 மே 21, புதன்கிழமை

யாழ். பிராந்தியப் பத்திரிகை எரிப்பு

எம். றொசாந்த்   / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஆயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழிலிருந்து வெளிவரும் பிராந்தியப் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 

வட மாகாண சபையின் 130ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின் , " மக்கள் ஆட்சி தத்துவத்துக்கு மாறாக இருந்தாலும்  விடுதலைப் புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு புறம்பாக இருந்தாலும் அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைபடுகின்றது" எனத் தெரிவித்திருந்தார். 
அது தொடர்பில், யாழிலிருந்து வெளியாகும் குறித்த பிராந்திய பத்திரிகை "முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது. முறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார் அஸ்மின் " என தலைப்பு செய்தியாக இன்று வெளியிட்டு இருந்தது. 
 
குறித்த செய்தியால் பெருமளவான முஸ்லிம் மக்கள் மத்தியில்  அஸ்மினுக்கு எதிரான தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது. 
 
இந்நிலையில், இன்று மாலை யாழ். நகரில் உள்ள ஜீம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக கூடிய அஸ்மினின் ஆதரவாளர்கள் சிலர் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி இன்றைய பத்திரிக்கையை தீயிட்டுக் கொளுத்தினார்கள். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X