2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் உப்பு நிறுவனம் ஸ்தாபிப்பு

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில், உப்பு உற்பத்தி நிறுவனமொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, நேற்று (27) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன், குறித்த நிறுவனத்தைத் திறந்து வைத்தார்.

இதன்போது, நிகழ்வில் உறுப்பினர்களுக்கான கௌரவங்களைத் தவிர்த்து, அந்த நிதியைப் பயன்படுத்தி, தென்மராட்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 110 வறிய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

30 வருட யுத்தத்தின் பின்னர், 200 மில்லியன் ரூபாய் முதலீட்டில், இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட 100 ஏக்கர் அரச காணியிலேயே, இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 300 இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

வடமாகாண சபையால், ஈழத்து புலம்பெயர் மக்களால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுத் திட்டங்களில் இந்த உப்பு நிறுவன முதலீடு மிகப்பெரிய முதலீட்டின் பங்காக கருதப்படுகின்றது.

இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சரின் செயலளார் திருமதி கேதீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் கேசகவன் சயந்தன் மற்றும் சுகிர்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .