2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இயற்றாலை வரணிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
 
வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற இவ்விபத்தில், சின்னத்தம்பி தேவராஜா (வயது 56) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.  

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரை, பின்னால் வந்த கப் ரக வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை, கொடிகாமம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .