2025 ஜூலை 23, புதன்கிழமை

விளையாட்டுக்கு 22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள விளையாட்டுத் திணைக்களத்தின் மூலதச் செலவினங்களை மேற்கொள்வதற்கு 22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைக்கொண்டு, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

5 கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அமைத்தல், 5 கரப்பந்தாட்ட மைதானங்கள் அமைத்தல், 5 விளையாட்டு பயிற்சி நிலையங்கள் அமைத்தல், 5 மாவட்டங்களிலும் 10 பொது விளையாட்டு மைதானங்கள் புனரமைத்தல், 5 மாவட்டங்களிலும் 400 மீற்றர் சுற்றளவுள்ள மைதானங்கள் புனரமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .