2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வலி. வடக்கில் 650 ஏக்கர் காணி விடுவிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 650 ஏக்கர் பொது மக்களின் காணி இன்று (12) உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கத் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வு, மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் 3 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 650 ஏக்கர் காணி இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .