2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா சிறையில் 15 கைதிகள் விடுவிப்பு

Freelancer   / 2023 மே 05 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன் 

வெசாக் தினத்தையொட்டி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15  கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர்.  

இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.  

அதற்கமைய, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று (05) விடுவிக்கப்பட்டனர்

இதேவேளை, இன்று (5) மற்றும் நாளை (6) ஆகிய தினங்களில் சிறைக் கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .