2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வவுனியா சிறையில் மூவருக்கு பொதுமன்னிப்பு

Princiya Dixci   / 2022 மே 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வெசாக் தினத்தையொட்டி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள், இன்று (15) விடுதலைசெய்யப்பட்டனர்.

வெசாக் தினத்தையொட்டி, நாடளாவிய ரீதியாக 244 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, சிறு குற்றங்களை புரிந்து வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த மூன்று பேர், இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், இவர்களில் இருவர் வேறு குற்றச்சாட்டுக்களிலும் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவரே விடுவிக்கப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .