Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை, அல்வாய் வடக்கு பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிர்காப்பு பணியாளர்களும் அச்சுறுத்தப்பட்ட
சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.
இதில் பலர் காயமடைந்த தகவல் வழங்கப்பட்ட நிலையில், 1990 அம்புலன்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளது.
இதன்போது அம்புலன்ஸ் வண்டியை வழிமறித்த காடையா்கள், அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தியதுடன், பணியாளா்களை அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும், அம்புலன்ஸ் அங்கிருந்து நோயாளா்களை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. R
56 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
5 hours ago