Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பாதசாரிகடவையில் வாகனத்தை நிறுத்தாது, பிரதான வீதிக்கு நுழைய முற்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம், புத்தூர் சந்தியில் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், முச்சக்கரவண்டி முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், ஓட்டுநர் படுகாயங்களுக்கு உள்ளாகி, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
ஆவரங்கால் கிழக்கு - புத்தூர் பகுதியைச் சேர்ந்த கீர்த்திசிங்கம் இராஜசிங்கம் (வயது 48) என்ற நபரே, இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த நபர், திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்கிவிட்டு, பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் முச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தார்.
இதன்போது, சுன்னாகம் - புத்தூர் வீதியூடாக வந்து கொண்டிருந்த டிப்பர் ஒன்று, பருத்தித்துறை பிரதான வீதிக்கு நுழைய முற்பட்ட போது, பாதசாரிகடவையில் வாகனத்தை நிறுத்தாது, எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியை மோதியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார், டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர்.
அத்துடன், டிப்பர் வாகனம், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025