2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்

Editorial   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பஸ் பனிக்கங்குளம் ஏ-9 வீதியில் பயணித்த போது, வீதியில் தரித்து நின்ற ரிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கவனயீனம் மற்றும் நித்திரை காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என மாங்குளம் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X