2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் யாழ். இளைஞன் பலி - ஒருவர் படுகாயம்

Freelancer   / 2022 மே 28 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். 

கொட்டடி - நாவாந்துறை பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் நவரட்ணராஜா சங்கீத் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இவருடன் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்  யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X