2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Janu   / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் வெளிக்கதவை மூடிவிட்டு வீட்டிற்குள் இருந்த வேளை இரவு 10.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராது அயலவர்களை அழைத்த போது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 நிதர்ஷன் வினோத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X