2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வீட்டை உடைத்து திருடியவர் சிக்கினார்

Freelancer   / 2022 நவம்பர் 15 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கோண்டாவிலில் வீடு ஒன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் நேற்று கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த நபரை உரும்பிராய் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 2, 1/2 தங்கப் பவுண் சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 25 ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றமை தொடர்பில் வீட்டில் வசிப்பவரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .