Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிவஞானம் ஸ்ரீதரன் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், சமூக பொறுப்புடன் இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய் தொடர்பான பரிசோதனையும் சிவஞானம் ஸ்ரீதரன் மேற்கொண்டார்.
பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் எனது தந்தையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வீடு திரும்பிவிட்டார்” என்றார்.
முன்னதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கொரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிவஞானம் சிறிதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோ காரணமாக இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளமையால் அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று(19) முற்பகல் அனுப்பிவைக்கப்பட்டார்.
எம்.றொசாந்த்
15 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago