2025 மே 21, புதன்கிழமை

புத்தளம் ஒன்லைனின் 2ஆவது ஆண்டு பூர்த்தி விழா

Super User   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பெரிய பள்ளிவாசலின் உத்தியோகபூர்வ இணையத்தளமான புத்தளம் ஒன்லைனின் 2ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வும் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நேற்று சனிக்கிழமை புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வின் போது ஊடகவியலாளர்களான ஏ.எல்.இர்பான், ஏ.எஸ்.புல்கி, மர்லின் மரிக்கார், அப்துல்லாஹ் அஸ்ஸாம், வீர சொக்கன் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்படடனர்.

இது போன்று புத்தளத்தில் ஊடகத்துறையில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம், புத்தளம் தமிழ் மொழி எழுத்தாளர் சங்கம், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கம் என்பனவும் கௌரவிக்கப்பட்டன.

இதே வேளை புத்தளம் ஒன் லைனின் 2ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு புத்தளத்தின் வரலாற்றினை மையப்படுத்தி நடாத்தப்பட்ட வினாவிடை போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், சிறந்த புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் முஸம்மில் ஹாஜியார் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ், உலமாக்கள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் இந் நிகழ்வில் பிரதான உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X