2025 மே 22, வியாழக்கிழமை

ரஜரட்டை, வடமாகாணத்திலிருந்து 4 இலட்சத்து 40176 கிலோகிராம் நெல் கொள்வனவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

நெல் கொள்வனவு நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்டை மற்றும் வடமாகாணத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள்  4 இலட்சத்து 40176 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் பிரதேச முகாரமயாளர் பந்துல குமார தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் இதுவரையில் 44 ஆயிரம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு மாவட்டத்தில் 1 இலட்சத்து 73 ஆயிரம் ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. 30 மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற அதேவேளை களஞ்சியப்படுத்துவதற்காக 34 களஞ்சியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இம்முறை அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 35 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 63,000 ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. 25 மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு இம்முறை 50 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .