2025 மே 21, புதன்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 13 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயறன்றதாகக் கூறப்படும் 45 பேரை மாரவில பிரதேசத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்களே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு  கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்காக சகல ஏற்பாடுகளையும் செய்ததாகக் கூறப்படும் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை மாரவில நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .