2025 மே 14, புதன்கிழமை

12 வயது சிறுமியை கடத்திய 21 வயது இளைஞர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாடசாலை மாணவியான 12 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்றதாகச் சொல்லப்படும் 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். 

வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 12ஆம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சந்தேக நபரால் கடத்திச் செல்லப்பட்டவராவார்.

குறித்த சிறுமியின் தாய், சிறுமி காணாமல் போயுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர்  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞருடன் தான் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும், அதன் காரணமாக தான் தனது காதலரின் வேண்டுகோளின் பிரகாரம் அவருடன் சென்றதாகவும்  கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார்.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிஸார் சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X