2025 மே 21, புதன்கிழமை

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் 19 வயது இளைஞனை மாதம்பை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாதம்பை, ஜயபூமி பிரதேசத்தில் சிறுமி ஒருவருடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவலினையடுத்தே குறித்த இளைஞர் நேற்று வெள்ளிக்கிழமை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஜோடி நொச்சியாகம பிரதேசத்தினை சேர்ந்தவர்களெனவும் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் மாதம்பை பிரதேசத்திற்கு வந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞரிடம் மாதம்பை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X