2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருணாகல் - பொல்பித்தகம மொரகொல்லாகம பிரதேசத்தில் புதையல் தோண்டிய நான்கு சந்தேக நபர்களை பொல்பித்திகம பொலிஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரதேசத்தை சோதனையிட்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரகள் நால்வரும் மஹவ நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X