2025 மே 23, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் இரு ரஷ்யப் பிரஜைகள் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு, ஏத்துக்கால கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குளிப்பதற்காகச் சென்ற இரு ரஷ்யப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ரஷ்யப் பிரஜைகளான 54 வயதுடைய ஆண் ஒருவரும் 28 வயதுடைய பெண் ஒருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X