2025 மே 23, வெள்ளிக்கிழமை

குறுந்தகவல்கள் மூலம் ஏமாற்றிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்கத் தொலைபேசி மூலம் போலியான குறுந்தகவல்களை அனுப்பி ஏமாற்றிவந்ததாக கூறப்படும் மூவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நைஜீரியப் பிரஜைகள் இருவரும் இலங்கைப் பிரஜையும் அடங்குகின்றனர்.

அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் கார் ஒன்றையும் பணத்தையும் ஏனைய பொருட்களையும் தாங்கள் வென்றுள்ளதாகக் கூறியே இவர்கள் போலியான குறுந்தகவலை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சந்தேக நபர்களிடமிருந்து 70,000 ரூபா பணம், 2,450 அமெரிக்க டொலர்கள், ஒரு போலி கடவுச்சீட்டு மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகளை மீட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினார்.

இவர்கள்  தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X