2025 மே 22, வியாழக்கிழமை

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த இருவக்கு எதிராக வழக்கு தாக்கல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு புத்தளம் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப் புறச்சூழலை வைத்திருந்த 27 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் இருவருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் நகர சபையின் பொதுசுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் தெரவித்தார்.

புத்தளம் நகரசபை பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த வாரம் முதல் நகரில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்களுக்கு  சென்று அந்தப்பகுதிகளை பார்வையிட்ட போது டெங்கு நுளம்பு பெருகும் வகையில் தமது சுற்றுப்புறச் சூழலை வைத்திருந்த 27 வீடுகள் இனங்காணப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த இடங்களை துப்பரவு செய்வதற்கு அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாள்; கால அவகாசத்தில் 25 வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்துள்ளனர். ஏனை இரண்டு வீடுகளின் உரிமையார்கள் மட்டும் துப்பரவு செய்யவில்லை. இதனால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X