2025 மே 22, வியாழக்கிழமை

சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அடுத்த வருடம் பூர்த்தியாவதற்குள் வடமத்திய மாகாணத்திலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி ஏற்கும்போது வடமத்திய மாகாணத்தில் 35 - 40 வீதமான கிராமங்களுக்கே மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 98 வீதமாகக் காணப்படுகிறது.

இதேவேளை அடுத்த வருடத்தின் ஆரம்ப பகுதியில்  பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X