2025 மே 22, வியாழக்கிழமை

பஸ் விபத்து; எட்டு பயணிகள் காயம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 23 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

புத்தளம், வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எளுவன்குளமிருந்து புத்தளம் நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியொன்று எட்டாம் மைல் கல் பிரதேசத்தில் வீதியை விட்டுவிலகி புரண்டதில் எட்டு பயணிகள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயங்களுக்குள்ளான பயணிகள் வண்ணாத்திவில்லு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எளுவன்குளம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி இன்று காலை புறப்பட்ட குறித்த பஸ் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தவேளை வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீதியைவிட்டு விலகி புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X