2025 மே 22, வியாழக்கிழமை

கற்பிட்டி கோட்டக் கல்வி அலுவலக கட்டிடத்துககு அடிக்கல் நடல்

Super User   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


கற்பிட்டி கல்விக் கோட்டம் ஆரம்பிக்கப்பட்டு 31 வருடங்களின் பின் கோட்ட கல்வி அலுவலக கட்டிடத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

75 இலட்சம் ரூபா பெறுமதியான இரு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்திற்கு முதற் கட்டமாக 36 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் வேண்டுகோளுக்கினங்க மாகாண கல்வியமைச்சரும் முதலமைச்;சருமான அதுல விஜயசிங்கவினால் இந்த கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டள்ளது.

இந்த நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த, மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவு பணிப்பாளர் இஸட்.ஏ. சன்ஹிர், கல்பிட்டி கோட்ட கல்வி பிரிவு பணிப்பாளர் நூஹ்லெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இது வரை காலமும் கற்பிட்டி கோட்ட கல்வி அலுவலகம் கற்பிட்டி அல்-அக்ஷா பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .