2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோத மதுபான நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 08 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த  பொலிஸார், சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம், யசசிரிபுர பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான நிலையத்தையே பொலிஸார் நேற்று வியாழக்கிழமை சுற்றிவளைத்தனர்.

இதன்போது பொலிஸார் மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்தே பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .