2025 மே 21, புதன்கிழமை

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 மார்ச் 15 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் நூர்நகர் பகுதியைச் சேர்ந்த  இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை புத்தளம் நூர்நகர்ப் பகுதியிலுள்ள இரண்டு இளைஞர்களை கடத்துவற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கெப் ரக வாகனத்தைப் பொலிஸார் கைப்பற்றியதுடன், அதன் சாரதியையும் நேற்று கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வாகன சாரதியை புத்தளம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்கும் படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இரண்டு இளைஞர்களையும் தாக்கிய குழுவினர் தலைமறைவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

கடந்த புதன்கிழமை இரவு புத்தளம் நூர் நகர் பகுதியில் வசித்துக்கும் இரண்டு இளைஞர்கள் நூர் பள்ளிவாசல் சந்தியில் வைத்தே இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் கடத்திச்செல்லப்பட்ட இடத்திலேயே மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .