2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

Super User   / 2013 மார்ச் 18 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

150 போத்தல் அளவுடைய சட்டவிரோத மதுபானத்தினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற வணாத்தவில்லு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தல் செம்புகுளி பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முந்தல் பொலிஸார் வீதி பரிசோதனையில் ஈடுப்பட்ட வேளை குறித்த சந்தேக நபரும் மற்றுமொரு பெண்னும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் முச்சக்கர வண்டியில் 150 போத்தல் அளவுடைய சட்ட விரோத மதுபானத்தினை இரண்டு பொலித்தீன் உரைகளில் கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .