2025 மே 21, புதன்கிழமை

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தப் பெண் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் சுமார் 14 இலட்சம் ரூபா வரையில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பணம் கொடுத்த இளைஞர்கள் பலர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்தே இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .