2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

நிவாரணம் வழங்க பணிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீமின்னாவ மற்றும் குமுக்வௌ கிராமங்களில் கடும் காற்றினால்
சேதத்திற்குள்ளாக்கப்பட்ட வீடுகளுக்கு துரித கதியில் நிவாரணங்களை வழங்குமாறு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கூரைகள் உடைந்த வீடுகளுக்கும் கூரைத் தகடுகள் உடைந்த வீடுகளுக்கும் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .