2025 மே 21, புதன்கிழமை

தாயை தாக்கிய இளைஞருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

தனது தாயை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான இளைஞரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட நீதவானுமான சந்திம எதிரிமான்ன நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

49 வயதான தனது தாயிடம் மதுபானம் அருந்துவதற்காக பணம் கேட்டு இவ்விளைஞர் தொந்தரவு செய்துள்ளார். எனினும் தாய் பணம் கொடுக்காததால் கோபமடைந்த இவ்விளைஞர் தனது தாயை தாக்கியுள்ளார்.

இத்தாய் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X