2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; எழுவர் காயம்

Suganthini Ratnam   / 2013 மே 29 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், பள்ளம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்குளி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  07 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வானும் மற்றுமொரு தனியார் வானுமே மோதி விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் 23 வயதான இளைஞர் ஒருவரே  இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பள்ளம பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X