2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தாக்குதலுடன் தொடர்புடைய நபரை அடையாளம் காட்டுமாறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர


புத்தளம், தப்போவே கிராமிய வைத்தியசாலையினது வைத்தியரின் விடுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் காட்டுமாறு கோரி தேங்காய் உடைத்து பிரார்த்தனை நடாத்திய நிகழ்வு இன்று நடைபெற்றது.

தப்போவ கிராமிய வைத்தியசாலையிலிருந்து ஊர்வலமாக ஐயனார் தேவஸ்தானத்துக்கு சென்ற நூற்றுக்கணக்கான மக்கள், அங்கு தேங்காய் உடைத்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.

மேற்படி வைத்தியசாலையின் வைத்தியரின் விடுதிக்கு அசீட் வீசப்பட்டதுடன், மலம் வீசி அசுத்தப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குறித்த வைத்தியர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதனால் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக குறித்த வைத்தியசாலை இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .