2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 03 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், முந்தல் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நீண்டகாலமாக நடத்தப்பட்டுவந்த சட்டவிரோத மதுபான நிலையமொன்று முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை இச்சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகையிடப்பட்டது.  இதன்போது 150 சட்டவிரோத மதுபானப்  போத்தல்களும்  கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஜூலை மாதம் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X