2025 மே 15, வியாழக்கிழமை

போதைப்பொருள் பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்பது குறித்து ஆராய்வு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு அமைவாகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

இக் கூட்டத்தின் போது சிகரெட், மது, போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளவர்களினை மீட்பது தொடர்பாகவும், போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இந் நிகழ்வில் வடமேல் மாகாண போதைப்பொருள் தடுப்பு அதிகாரி திருமதி. என். நவரத்ன, புத்தளம் மாவட்ட சமூர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி. சந்த நாயக்க, புத்தளம் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் சந்தன பத்திரகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .