2025 மே 14, புதன்கிழமை

ரணிலுக்கு எனது அமைச்சைக் கொடுக்கத் தயார்: பிரியங்கர ஜெயரத்ன

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்
 
''ரணில் விக்ரமசிங்க எம்முடன் இணைந்தால் நான் எனது அமைச்சு பதவியினை அவருக்கு விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளேன்'' என அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார்.
 
புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ''ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதியாவோ, பிரதமராகவோ, அமைச்சராகவோ முடியாவிட்டால் எமது கட்சிக்கு வருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஆனால் பிரதமர் பதவி வழங்க முடியாது. நான் எனது அமைச்சினை அவருக்காக விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளேன்'' என மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Monday, 14 October 2013 03:23 PM

    நானாக இருந்தால் நாக்கை பிடுங்கி சாகுவேன்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .