2025 மே 14, புதன்கிழமை

வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

வென்னப்புவ சுதுவெல்ல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ லுணுவில வீதி,; சுதுவெல்ல பிரதேசத்தில் நேற்றிரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றும் வான் ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாராவில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது கடமைகளை முடித்துகொண்டு வீடு திரும்பிகொண்டிருந்த போது இவ்விபத்து சம்பிவித்துள்ளது.

இவ்விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .