2025 மே 14, புதன்கிழமை

கால்நடைகளைத் திருடிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தில் நீண்டகாலமாக கால்நடைகளைத் திருடி விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் 04 பேரை முந்தல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கல்பிட்டிப் பிரதேசத்தில் ஒருவரையும்  பாலாவியில் ஒருவரையும் கொட்டுக்கச்சேரியவில் இருவரையும் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து   மாடு ஒன்றையும் 4  ஆடுகளையும்  முச்சக்கரவண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் சந்தேக நபர்களிடம் தொடர்ந்து  விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .