2025 மே 14, புதன்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல், கீரிமட்டாவ பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று புதன்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து  சிவில் உடையில் குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார், அங்கு இளைஞர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்தியபோது   அவரின் காற்சட்டைப் பையில் ஹெரோயின் காணப்பட்டதாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து ஹெரோயினை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் முந்தல் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .