2025 மே 14, புதன்கிழமை

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 13 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல், முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று  சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில்  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்படி சட்டவிரோத மதுபான நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு  சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் நீண்டகாலமாக  மிகவும் இரகசியமாக சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

இச்சுற்றிவளைப்பின்போது இவ்வீட்டிலிருந்து 100 போத்தல் சட்டவிரோத மதுபானம், கோடா 1920 கிராம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று புதன்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .