2025 மே 14, புதன்கிழமை

புத்தளத்தில் இளைஞர்கள் கௌரவிப்பு

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 23ஆவது பொதுநலவாய மாநட்டின்போது பொதுநலவாய இளைஞர் சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட எஸ். சதாம் திக்ராம் மற்றும் குறித்த  மாநாட்டில் கலந்துகொண்ட புத்தளம் இளைஞர்களான ஏ. அர்ஸத் அலி, முஸ்அப் ஸாதிர் மஹ்பூப், எஸ். சஹிக்கா, இஸாம் மரிக்கார் ஆகியோரினை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை புத்தளத்தில் நடைபெற்றது.

புத்தளம் நகர சபை, புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் கல்வி அபிவிருத்தி குழு மற்றும் புத்தளம் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த  வரவேற்பு நிகழ்வினை நடாத்தியது.

இந்த வரவேற்பு நிகழ்வின்போது இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில் பொருளாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜே.எம்.ஜவ்ஸி, கடந்த ஆண்டு புலமை பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற எம்.எப்.பஸ்லா ஆகியோரும் வரவேற்கப்பட்டனர்.

புத்தளம் தபால் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த வரவேற்பு நிகழ்வு மன்னார் வீதியினூடாக புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது பல்வேறு இடங்களிலும் பல்வேறு அமைப்புக்களாலும் சாதனையாளர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என.டி.எம்.தாஹிர் மற்றும் எம்.நியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .