2026 மார்ச் 12, வியாழக்கிழமை

புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான காதி நீதிபதி காலமானார்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

அகில இலங்கை சமாதான நீதவானும் ஓய்வு பெற்ற அதிபரும் புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான காதி நீதிபதியுமான கே.பறக்கதுல்லாஹ், இன்று புதன்கிழமை (05) காலமானார்.

கடந்த 38 வருடகாலம் அரச சேவையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய கே.பறகதுல்லாஹ், இறுதியாக மன்னார் புதுக்குடியிருப்பு அரசினர் பாடசாலையில் அதிபராகக் கடமையற்றியிருந்தார்.

அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான காதி நீதிபதியாக கடந்த ஐந்து வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருந்த போதே இன்று காலமானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .