2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரூ.4 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு கிலோகிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவரை இன்று அதிகாலை கைது செய்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மடம்பெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிலத்தின் கீழ் பங்கரொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இராணுவத்திலிருந்து விலகிய முன்னாள் வீரராவார். இவர் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் ஆலோசனையின்படி இலஞ்ச ஒழிப்புப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் கஞ்சா போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .