2025 ஜூலை 12, சனிக்கிழமை

80,000 கிலோ கிராமுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமாகாணத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 80 ஆயிரம் கிலோ கிராமுக்கும் மேற்பட்ட நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் பிரதேச முகாமையாளர் பந்துல குமார  தெரிவித்தார்.

மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கரில் நெல் வேளாண்மை பயிரிடப்பட்டுள்ளதோடு, இம்முறை நெல் கொள்வனவு 6 மத்திய நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இம்முறை 2 இலட்சம் மெற்றிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .