2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அலி சப்ரியின் இணைப்புச் செயலாளராக இர்ஷாத்

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹிமீன் இணைப்புச் செயலாளராக புத்தளத்தைச்  சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும், சிறந்த அறிவிப்பாளராகவும் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்.

தேசிய மற்றும் சர்வதேச ஊடக அமைப்புகளில் அங்கத்துவம் பெற்றுள்ள இவர்,  நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியினை மேற்கொண்டவரும் ஆவார்.

சிறந்த மொழியாற்றல் கொண்ட இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் சிறந்த மொழிபெயர்ப்பாளரும், தேசமான்ய மற்றும் தேசகீர்த்தி  போன்ற பட்டங்களை பெற்றவரும் ஆவார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .