2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உடப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ள10ர் மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கடற்படையினரால், நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பத்துளுஓயா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் குறித்த பகுதியில் வீடொன்றை சோதனை செய்தபோதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானம் 2 லீட்டரும், 37 மதன மோதக பக்கட்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .