2025 நவம்பர் 05, புதன்கிழமை

உழவியந்திரத்திலிருந்து தவறிவிழுந்ததில் சிறுவன் பலி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உழவியந்திரத்திலிருந்து தவறிவிழுந்த 16 வயதுச் சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளான். இச்சம்பவம், நுஹேவௌ பகுதியில் திங்கட்கிழமை (29) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுஹேவௌயிலிருந்து ஹெடஓயா நோக்கிப் பயணித்த உழவியந்திரத்தின் அமரும் ஆசனத்தின் நுனியிலிருந்து பயணித்த போதே சிறுவன் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளான். உயிரிழந்த சிறுவன், சியம்பாலாண்டுவ பகுதியைச் சேர்ந்தவன் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

ஊழவியந்திரத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X